எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சோச்சில் டிக்ஸன்கட்டுரைகள்

இயேசுவைப் போன்று நடவுங்கள்

"மாறுவேடத்தின் தலைவன்" என்பது இந்தோனேசியாவில் நீரிலும், உலகின் மிகப்பெரிய பவளப்பாறையிலும் வாழ்கிறது. இந்தப் போலியான ஆக்டோபஸ், மற்ற ஆக்டோபஸ்களைப் போலவே தன் தோலின் நிறத்தை அதன் சுற்றுப்புறத்திற்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும். புத்திசாலித்தனமான இந்த உயிரினம் அதின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகையில்; விஷமுள்ள சிங்கமீன்கள், கொடிய கடல் பாம்புகள் ஆகியவற்றைப் போன்று, தன் வடிவம், நகர்வு மற்றும் குணாதிசியத்தை மாற்றிக் கொள்ளும்.

 

இந்தப் போலியான ஆக்டோபஸ் போலல்லாமல், இயேசுவின் விசுவாசிகளாகிய நாம் நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகில் தனித்து நிற்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள, நம் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களால் நாம் அச்சுறுத்தப்படும் போது, அவர்களுடன் இணைந்து செயல்பட நாம் தூண்டப்படலாம். ஆனால் நாம் அப்படிச் செய்யும் போது, தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருக்க முடியாது. எவ்வாறாயினும், அப்போஸ்தலனாகிய பவுல், நம்முடைய வாழ்க்கை ஒவ்வொரு அம்சத்திலும் இயேசுவைப் பிரதிநிதித்துவப்படுத்தவேண்டும் என்று, "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று" (ரோமர் 12:1) நம்மை உற்சாகப்படுத்துகிறார்.

 

நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் "இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரிக்கும்படி" (வச. 2) நமக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம். ஆனால் நாம் தேவனைப் பின்பற்றுகிறோம் என்பதை நம் வார்த்தையிலும், அதேபோல் நாம் செயலிலும் காட்ட வேண்டும். நாம் வேதவசனங்களுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய அன்பான குணாதிசயங்களை பிரதிபலிக்கும்போது, அதனால் வரும் பலன்கள், எந்த இழப்பைக் காட்டிலும் எப்பொழுதும் பெரிது என்பதை நம் வாழ்வில் நிரூபிக்க முடியும். இன்று நீங்கள் இயேசுவை எவ்வாறு பின்பற்றுவீர்கள்?               

படிப்படியாக

தோளோடு தோள் சேர்த்து நின்று, மூன்று பேர் கொண்ட ஒரு டஜன் அணியினர் நான்கு-கால் பந்தயத்திற்குத் தயாராயினர். இருபுறத்திலும் இருந்த இரண்டு நபர்களும் நடுவில் இருந்த நபரின் காலோடு, ஒரு வண்ணமயமான கயிற்றினால் பிணைக்கப்பட்டனர். அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டது. விசில் அடித்ததும் ஒவ்வொரு அணிகளும் இலக்கை நோக்கி முன்னேறின. அவர்களில் பெரும்பாலானோர் கீழே விழுந்து மீண்டும் எழும்பி நிற்க போராடினர். ஒரு சில குழுக்கள் நடந்துசெல்வதற்கு பதிலாக குதித்து செல்ல முயற்சித்தனர். சிலர் ஆட்டத்தை இடையிலேயே நிறுத்திக்கொண்டனர். ஆனால் அதில் ஒரு குழு மட்டும் தங்கள் ஓட்டத்தை துவக்கமாமல் தாமதம் செய்தது. ஒரு திட்டத்தை தீட்டியது. போகும் வழியில் ஒருவரோடு ஒருவர் தெளிவாய் தொடர்புகொண்டனர். அவர்களும் அவ்வப்போது இடற நேரிட்டது, ஆனாலும் மீண்டெழுந்து ஒவ்வொரு அணியையும் முந்தினர். அவர்கள் ஒருவரோடொருவர் ஒத்துழைக்க எடுத்த தீர்மானம், வெற்றி இலக்கை அடைய அவர்களுக்கு உதவியது. 

கிறிஸ்தவர்களாகிய நாமும் இந்த சமுதாயத்தில் வாழும் வாழ்க்கையில் இந்த நான்கு-கால் பந்தயத்தைப் போலவே சலிப்படைய நேரிடுகிறது. நம்மிலிருந்து முரண்படும் கருத்துக்களை உடையவர்களோடு ஓடும்போது அடிக்கடி தடுமாறுகிறோம். 

பேதுரு, ஜெபம், விருந்தோம்பல், மற்றும் நமக்கு முன்பாக இருக்கும் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்வதைக் குறித்து பேசுகிறார். அவர், “நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல,” (வச. 10) “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” (1 பேதுரு 4:8) என்று வலியுறுத்துகிறார். நாம் தேவனிடத்தில் தொடர்புகொள்வதற்கும் ஒத்துழைப்பதற்குமான உதவி கேட்கும்போது, வேற்றுமையிலும் ஒற்றுமையை கொண்டாடக்கூடிய ஓட்டத்தை நாம் நேர்த்தியாய் ஓட முடியும்.

தேவனுக்கு அருகில்

ஒரு அதிகாரி என்னை அழைத்த பின்பு, நான் மாவட்ட சிறைச்சாலைக்குள் நுழைந்தேன். பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டேன். நெரிசலான லாபியில் அமர்ந்தேன். வெகு நேரம் காத்திருப்பதைக் குறித்து சிறுபிள்ளைகள் குறைகூறுவதைக் கண்டு பெரியவர்கள் நடுங்குவதையும் பெருமூச்சிவிடுவதையும் பார்த்து, நான் அமைதியாக ஜெபித்தேன். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு ஆயுதமேந்திய காவலர் என்னுடைய பெயர்கள் அடங்கிய பட்டியலை அழைத்தார். அவர் என் குழுவை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலிகளில் அமரும்படிக்கு சைகை செய்தார். தடிமனான கண்ணாடி ஜன்னலின் மறுபக்கம் இருந்த நாற்காலியில் என் சித்தி மகன் அமர்ந்து டெலிபோன் ரிசீவரை எடுத்தபோது, என் இயலாமையின் ஆழம் என்னை ஆட்கொண்டது. ஆனால் நான் கண்ணீர் சிந்தி அழுதபோது, என்னுடைய வளர்ப்பு மகன் இன்னும் தேவனுக்கு அருகாமயில் தான் இருக்கிறான் என்பதை தேவன் எனக்கு உறுதிபடுத்தினார். 

சங்கீதம் 139இல், தாவீது தேவனைப் பார்த்து, “நீர் என்னை.. அறிந்திருக்கிறீர்... என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்” என்று சொல்லுகிறான். அனைத்தும் அறிந்த தேவனை அறிக்கையிட்ட தாவீது, தேவனுடைய பாதுகாப்பையும் பராமரிப்பையும் உணருகிறான் (வச. 5). தேவனுடைய ஆச்சரியமான அறிவைக் குறித்தும் அவருடைய தொடுதலைக் குறித்தும் ஆச்சரியப்பட்ட தாவீது இரண்டு கேள்விகளின் மூலம் தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறான்: “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?” (வச. 7). 

நாமோ அல்லது நம்முடைய நேசத்திற்குரியவர்களோ கடினமான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும்போது, அது நம்மை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும். அதுபோன்ற சூழ்நிலையில், தேவனுடைய கரம் நமக்கு ஆதரவாகவும் உறுதியாகவும் இருக்கும். அவர் நம்மை மீட்கமுடியாத தூரத்தில் நாம் இருப்பதாக ஒருவேளை நாம் எண்ணினாலும், அவருக்கு எட்டும் தூரத்தில் தான் நாம் இருக்கிறோம் என்பதை நாம் மறந்துபோகவேண்டாம். 

தேவன் பார்க்கிறார், புரிந்துகொள்கிறார், பாதுகாக்கிறார்

சில நேரங்களில், நாள்பட்ட வலி மற்றும் சோர்வுடன் வாழ்வது என்பது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு தனக்கு யாருமில்லை என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. தேவனோ அல்லது மற்றவர்களோ என்னை பார்க்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனது நாயுடன் அதிகாலையில் நான் ஜெபநடை ஏறெடுக்கும்போது, இதுபோன்ற உணர்வுகள் என்னை வெகுவாய் பாதித்தது. தூரத்தில் காற்று நிரப்பப்பட்ட பெரிய பலூன் பறந்து சென்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அதில் பயணம் செய்யும் நபர்கள் பூமியை உயரத்திலிருந்து பார்த்து ரசிக்கமுடியும். நான் என் அயலவர்களின் வீடுகளை நடந்து கடந்தபோது, பெருமூச்சு விட்டேன். அந்த மூடிய கதவுகளுக்குப் பின்னால் எத்தனை பேர் கண்ணுக்குத் தெரியாதவர்களாகவும் முக்கியமற்றவர்களாகவும் உணர்கிறார்கள்? நான் என் நடைப்பயணத்தை முடித்தவுடன், நான் அவர்களைப் பார்க்கிறேன், அவர்களைக் கவனித்துக்கொள்கிறேன் என்பதை என் அண்டை வீட்டாருக்குத் தெரியப்படுத்த எனக்கு வாய்ப்புகளைத் தரும்படி தேவனிடம் கேட்டேன். அவரும் அப்படித்தான்.

தேவன் எத்தனை நட்சத்திரங்களைப் படைத்தார் என்னும் தொகை அவருக்கு தெரியும். ஒவ்வொரு நட்சத்திரங்களையும் அவர் பேர்சொல்லி அழைப்பது (சங்கீதம் 147:5), சிறு விஷயங்களுக்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது. அவருடைய வல்லமை, ஞானம், பகுத்தறிவு ஆகியவைகள் காலவரம்பற்றவைகள் (வச. 5).

தேவன் ஒவ்வொரு அவிசுவாசத்தின் அழுகையையும் கேட்கிறார்; ஒவ்வொரு அமைதியான கண்ணீரையும் அவர் தெளிவாகக் காண்கிறார். ஒவ்வொரு திருப்தி பெருமூச்சையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் எப்போது தடுமாறுகிறோம், எப்போது வெற்றிபெறுகிறோம் என்பதை அவர் பார்க்கிறார். நம்முடைய ஆழ்ந்த அச்சங்களையும், நமது உள்ளார்ந்த எண்ணங்களையும், நம்முடைய பயங்கரமான கனவுகளையும் அவர் புரிந்துகொள்கிறார். நாம் எங்கு இருந்தோம், எங்கு செல்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். நம் அண்டை வீட்டாரைப் பார்க்கவும், கேட்கவும், நேசிக்கவும் தேவன் நமக்கு உதவுவதால், நம்மைப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும், கவனித்துக் கொள்ளவும் அவரை முழுமையாய் நம்பலாம்.

இயேசுவைப் போல் நேசித்தல்

ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் ஒரு ரயில் நிலையத்தில் நேர்த்தியாய் உடையணிந்த ஒரு இளைஞன்,  ஒரு இருக்கையில் அமர்ந்து ரயிலுக்காகக் காத்திருந்தான். அவன் டை கட்டுவதில் சிரமப்பட்டபோது, ஒரு வயதான பெண்மணி தன் கணவரிடம் அவனுக்கு உதவிசெய்யும்படிக்கு கேட்டுக்கொண்டார். அந்த முதியவர் குனிந்து அந்த இளைஞனுக்கு டை முடிச்சு போடுவது எப்படி என்று கற்றுக்கொடுக்க ஆரம்பித்தபோது, யாரோ ஒருவன் மூவரையும் புகைப்படம் எடுத்தான். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானபோது, அதைப் பார்த்த பலர் பலன் எதிர்பாராமல் உதவிசெய்வதின் முக்கியத்துவத்தைக் குறித்த தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டனர். 

மற்றவர்களுக்கு இரக்கம் காண்பித்தல் என்பது கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில், இயேசு நமக்கு செய்த தியாகமான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இது தேவனுடைய அன்பின் பிரதிபலிப்பு. மேலும் “நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே” இயேசு சீஷர்களிடம் விரும்பிய ஒரு காரியம். சகோதரனையோ சகோதரியையோ வெறுப்பதை கொலைபாதகத்திற்கு யோவான் சமமாக்குகிறார் (வச. 15). பின்பு இயேசுவையே அன்பின் கிரியைகளுக்கு அவர் மாதிரியாக்குகிறார் (வச. 16). 

தன்னலமற்ற அன்பை நிரூபிக்க அதிகப்படியான தியாகத்தை செய்திருக்கவேண்டிய அவசியமில்லை. மாறாக, தேவ சாயலில் படைக்கப்பட்ட சக மனிதனுடைய தேவையை நம்முடைய தேவைக்கு மேலாக வைப்பதே தன்னலமற்ற அன்பாகும். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யும் வாய்ப்பு கிட்டும் சில முக்கியமான தருணங்களில் தன்னலமற்ற அன்பை பிரதிபலிக்கக்கூடும். நம்முடைய சுகமான சுயநல வட்டத்தை விட்டு வெளியேறி, நாம் செய்ய வேண்டிய அவசியமாய் தெரியாத உதவிகளையும் மற்றவர்களுக்கு செய்யும்போது, நாம் அவர்களை இயேசு நேசிப்பதுபோல் நேசிக்கத் துவங்குகிறோம் என்று அர்த்தம். 

துதியின் கண்ணீர்

சில ஆண்டுகளுக்கு முன்னால் மருத்துவமனையில் மிகுந்த சரீர பெலவீனத்தோடு இருந்த என்னுடைய தாயாரை நான் பராமரிக்கவேண்டியிருந்தது. அவருடைய கடைசி நான்கு மாதங்கள் அவரை பராமரிக்க கர்த்தர் எனக்கு உதவிசெய்தார். அவருடைய இழப்பின் துக்கத்தை தாங்கும்பொருட்டு தேவன் என்னை பெலப்படுத்தவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். என்னுடைய இந்த பல்வேறு போராட்டங்களின் மத்தியில் தேவனை துதிக்க பிரயாசப்பட்டேன். ஆனாலும் என்னுடைய தாயார் தன்னுடைய இறுதி மூச்சை விடும் வேளையில் நான் கட்டுப்பாட்டை மீறி, “அல்லேலூயா” என்ற முணுமுணுத்தேன். சில ஆண்டுகள் கழித்து சங்கீதம் 30ஐ நான் வாசிக்கும் வரையில், அந்த இக்கட்டான வேளையில் நான் தேவனுக்கு நன்றி சொல்லி துதித்ததைக் குறித்து நான் குற்றமனசாட்சியுடன் இருந்தேன். 

ஆலயப் பிரதிஷ்டையின்போது பாடப்பட்ட இந்த சங்கீததத்தில், தாவீது தேவனுடைய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் நன்றிசெலுத்துகிறார் (வச. 1-3). அவருடைய பரிசுத்த நாமத்தை துதியுங்கள் என்று மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறார் (வச. 4). மேலும் தேவன் கஷ்டத்தையும் நம்பிக்கையையும் எவ்விதம் ஒன்றாகப் பிணைக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார் (வச. 5). துக்கம், மகிழ்ச்சி, பாதுகாப்பு மற்றும் திகைப்பு என்று பல உணர்வுகளை பகிர்கிறார் (வச. 6-7). தேவனுடைய உதவிக்காக ஏறெடுக்கப்பட்ட அவருடைய கதறல்கள், தேவன் மீதான அவருடைய நம்பிக்கையை காண்பிக்கிறது (வச. 7-10). தாவீதின் அழுகை, நடனம், துக்கம் மற்றும் மகிழ்ச்சியின் தருணங்களோடு அவரது துதி சத்தமும் பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது (வச. 11). பாடுகளை சகித்துக்கொள்வதின் இரகசியத்தையும், சிக்கலான தன்மையையும் ஒப்புக்கொள்வது போலவும், தேவனுடைய கிருபையை முற்றிலும் சார்ந்துகொண்டு, தாவீது தேவனுக்கு தன்னுடைய பக்தியை பிரதிபலித்தான் (வச. 12).

தாவீதைப் போல நாமும் “என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்” (வச. 12) என்று பாடலாம். நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோமோ அல்லது காயப்பட்டிருக்கிறோமோ, தேவன் மீதான நம்முடைய நம்பிக்கையை பிரதிபலிக்கச்செய்து, மகிழ்ச்சியான துதி சத்தத்தோடும் கண்ணீரின் துதிகளோடும் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம். 

தேவனின் சத்தத்தை அறிதல்

பல வருட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஓநாய்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதற்குத் தனித்துவமான குரல்களைக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் அறிந்துகொண்டனர். ஒரு குறிப்பிட்ட ஒலி பகுப்பாய்வு குறியீட்டைப் பயன்படுத்தி, ஒரு பெண் ஓநாயின் ஊளையில் உள்ள பல்வேறு சப்த அளவுகள் மற்றும் சுருதிகள் குறிப்பிட்ட ஓநாய்களை 100 சதவீத துல்லியத்துடன் அடையாளம் காண உதவியது என்பதை ஒரு விஞ்ஞானி உணர்ந்தார்.

தேவன் தனது பிரியமான படைப்புகளின் தனித்துவமான குரல்களை அறிந்துகொண்டதற்கான பல உதாரணங்களை வேதாகமம் காட்டுகிறது. அவர் மோசேயை பெயர் சொல்லி அழைத்து நேரடியாகப் பேசினார் (யாத்திராகமம் 3:4-6). சங்கீதக்காரன் தாவீது, "நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார்" (சங்கீதம் 3:4) என்று அறிவித்தார். தேவனுடைய ஜனங்கள் அவருடைய குரலை அறிந்துகொள்வதின் அவசியத்தை அப்போஸ்தலன் பவுலும் வலியுறுத்தினார்.

எபேசிய மூப்பர்களிடம் விடைபெறும் போது, எருசலேமுக்குச் செல்லும்படி ஆவியானவர் தன்னை "கட்டாயப்படுத்தினார்" என்று பவுல் கூறினார். தேவனின் சத்தத்தைப் பின்பற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார், ஆனால் போகுமிடத்தில் சம்பவிப்பவற்றை அறியாதிருந்தார் (அப்போஸ்தலர் 20:22). "கொடிதான ஓநாய்கள்" சபைக்குள்ளிருந்து கூட "எழும்பி.. மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று" என்று அப்போஸ்தலன் எச்சரித்தார் (வச. 29-30). பின்னர், தேவனுடைய சத்தியத்தைப் பகுத்தறிவதில் இடைவிடாமல் விழித்திருங்கள் அவர் மூப்பர்களை ஊக்குவித்தார் (வச. 31).தேவன் நமக்குச் செவிசாய்த்து பதிலளிப்பார் என்பதை அறிந்துகொள்ளும் பாக்கியம் இயேசுவின் விசுவாசிகள் அனைவருக்கும் உண்டு. பரிசுத்த ஆவியின் வல்லமையும் நம்மிடம் உள்ளது, அவர் தேவனின் குரலை அடையாளம் காண உதவுகிறார், அது எப்போதும் வேத வார்த்தைகளுடன் ஒத்துப்போகிறது.

பாவங்களை களையெடுத்தல்

எங்கள் தாழ்வாரத்தில் தோட்டக் குழாய்க்கு அடுத்ததாக ஒரு தளிர் துளிர்ப்பதை நான் கவனித்தபோது, அதனால் என்னவாகப்போகிறது என்று புறக்கணித்தேன். ஒரு சிறிய களை எப்படி நமது புல்வெளியைக் காயப்படுத்தும்? ஆனால் வாரங்கள் செல்ல செல்ல, அந்த களை ஒரு சிறிய புதரின் அளவு வளர்ந்து எங்கள் முற்றத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதன் தேவையற்ற தண்டுகள் எங்கள் நடைபாதையின் ஒரு பகுதியில் வளைந்து மற்ற பகுதிகளில் முளைத்தன. அதன் அபாயகரமான வளர்ச்சியைப் புரிந்துகொண்ட நான், என் கணவரின் துணையோடு காட்டுக் களைகளை வேருடன் தோண்டி, களைக்கொல்லியைக் கொண்டு எங்கள் முற்றத்தைப் பாதுகாத்தேன்.

அதேபோலவே பாவத்தின் இருப்பை நாம் புறக்கணிக்கும்போது அல்லது மறுக்கும்போது, அதின் அபாயகரமான வளர்ச்சியால் நமது வாழ்வில் படர்ந்து, நமது அந்தரங்கத்தை இருளாக்கிவிடும். பாவமில்லாத நமது தேவனிடம் எவ்வளவேனும் இருளில்லை. அவருடைய பிள்ளைகளாகிய நாம், பாவங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம், அதனால் நாம் "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே" (1 யோவான் 1:7) நடக்கலாம். மனந்திரும்புதலின் மூலம், நாம் மன்னிப்பு மற்றும் பாவத்திலிருந்து விடுதலையை அனுபவிக்கிறோம் (வ. 8-10). நமக்காக இயேசுவென்னும் மிகச்சிறப்பாகப் பரிந்துபேசுகிறவர் உண்டு (2:1). அவர் நம் பாவங்களுக்கான இறுதி விலையை மனமுவந்து செலுத்தினார். ”நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற" (வச. 2) அவருடைய ஜீவரத்தமே அந்த கிரயம்.

நம்முடைய பாவம் தேவனால் சுட்டிக்காட்டப்படும்போது, ​​நாம் மறுப்பு, தவிர்ப்பு அல்லது பொறுப்பிலிருந்து விலகுவதைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நாம் ஒப்புக்கொண்டு மனந்திரும்பும்போது, நாம் அவரோடும் பிறரோடும் கொண்டிருக்கும் உறவிற்குத் தீங்கு விளைவிக்கும் பாவங்களை அவர் களையெடுக்கிறார்.

ஜெபக்குறிப்பு அட்டைகள்

புத்தக ஆசிரியர்களுக்கான ஒரு கலந்துரையாடலில் நானும் பணியாற்றிய போது, ​​என் தோழி ஒரு அஞ்சல் அட்டையைக் கொடுத்தாள் அதன் பின்புறம் தன் கைப்பட எழுதிய ஜெபம் ஒன்றும் இருந்தது. அவள், அந்த கலந்துரையாடலில் இருந்த ஆசிரியர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததாகவும், ஒவ்வொரு அட்டையிலும் குறிப்பிட்ட ஜெபத்தை எழுதி, எங்களிடம் கொடுத்தபோது தானும் ஜெபித்ததாகவும் கூறினாள். எனக்கான அவளுடைய தனிப்பட்ட செய்தியால் பிரமிப்படைந்த நான், என் தோழி மூலம் என்னை ஊக்குவித்த தேவனுக்கு நன்றி கூறினேன். பின்னர் நானும் அவளுக்காக ஜெபித்தேன். நிகழ்ச்சியின்போது வலி மற்றும் சோர்வுடன் நான் போராடியபோது, ​​அந்த ஜெபக்குறிப்பு அட்டையை வெளியே எடுத்தேன். அதை மீண்டும் படித்தபோது தேவன் என் ஆவிக்குப் புத்துணர்ச்சி அளித்தார்.

பிறர் வாழ்க்கையை உறுதிப்படுத்தும் ஜெபத்தின் தாக்கத்தை அப்போஸ்தலர் பவுல் அறிந்திருந்தார். " வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்" (எபேசியர் 6:12) போராடத் தயாராகும்படி விசுவாசிகளை அவர் வலியுறுத்தினார். அவர் இடைவிடாத மற்றும் நோக்கம் நிறைந்த ஜெபங்களை ஊக்குவித்தார், அதே சமயம் நாம் ஒருவருக்கொருவர் பரிந்து பேசும் மன்றாட்டு ஜெபத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். பவுலும் தமக்கு தைரியம் உண்டாகத்  தமது சார்பான ஜெபங்களையும் கோரினார். "சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, நான் தைரியமாய் என் வாயைத்திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்கு கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்." (வச. 19-20).

நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் நமக்கு ஆறுதல் அளித்து, நமது தீர்மானங்களைப் பலப்படுத்துகிறார். நமக்கு அவரும், பிறரும் தேவை என்று அவர் உறுதிப்படுத்துகிறார், ஒவ்வொரு ஜெபத்தையும் அவர் கேட்கிறார் என்று உறுதியளிக்கிறார்.  மௌனமாகவோ, சொல்லப்பட்டதோ அல்லது அட்டையில் எழுதப்பட்டதோ அவர் ஜெபங்களுக்குத் தமது பரிபூரண சித்தத்தின்படி பதிலளிக்கிறார்.